“மோடி 3-வது முறை அரியணை ஏறும்போது கச்சத்தீவை மீட்பது முக்கிய முடிவாக இருக்கும்!” – ஜி.கே.வாசன்                             ஜூனியர் விகடன்

“மீனவர் பிரச்னையில் திமுகவும் காங்கிரஸும் நீலிக் கண்ணீர் வடிக்கிறது.  மீனவர்கள் யாரும் திமுக, காங்கிரஸை ஒரு போதும் நம்பத் தயாராக இல்லை…” என்று த.மா.கா தலைவர் ஜி.கே வாசன் பேசியுள்ளார்.

Published:Updated:
ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்

11Comments
Share

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனர்  தேவநாதன் யாதவை ஆதரித்து த.மா.கா தலைவர் ஜி.கே வாசன் பிரசாரம் மேற்கொண்டார்.

ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்

அப்போது அவர் பேசும்போது, “மீனவர்களின் வாழ்வாதாரம் உயர உயர இந்திய நாட்டின் பொருளாதாரமும் உயரும். கச்சத்தீவு பிரச்னையில் காங்கிரஸ் தலைமையிலான அரசு வரலாற்று பிழை செய்தது. அதற்கு திமுக துணை போனது.

மீனவர் பிரச்னையில் திமுக-வும் காங்கிரஸும் நீலிக் கண்ணீர் வடிக்கிறது. மீனவர்கள் யாரும் திமுக, காங்கிரஸை ஒரு போதும் நம்பத்தயாராக இல்லை. மூன்றாவது முறையாக மோடி அரியணை ஏறும்போது இந்தியா வல்லரசாக மாறும். அப்போது கச்சத்தீவை மீட்பது முக்கிய முடிவாக இருக்கும்.

தேவநாதன் யாதவ்

தேவநாதன் யாதவ்

பெண்களுடைய முன்னேற்றம் இந்தியாவின் முன்னேற்றம் என பிரதமர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். திமுக அரசு மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு ஒரு லட்ச ரூபாய் கொடுத்தது போல ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

2026-ல் திமுக அரசு நீடிக்க கூடாதென்றால் இப்போது தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Author