கனடாவின் பொதுபாதுகாப்பு அமைச்சராக கரி ஆனந்தசங்கரி
கனடாவின் புதிய அமைச்சரவையின் பொதுபாதுகாப்பு அமைச்சரான கரி ஆனந்தசங்கரி(Gary Anandasangaree) பதவி பிரமானம் செய்துக்கொண்டுள்ளார்.
அண்மையில் கனடாவில் இடம்பெற்ற பொதுதேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான தரப்பு வெற்றிபெற்ற நிலையில் புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கார்னி 28 அமைச்சர்களை அமைச்சரவை பதவிகளுக்கும், மேலும் 10 பேரை வெளியுறவுச் செயலாளர்களாகவும் நியமித்துள்ளார்.
பொதுபாதுகாப்பு அமைச்சர்
கனேடியர்கள் விரும்பும் மற்றும் தகுதியான மாற்றத்தை வழங்குவதற்காக கனடாவின் புதிய அமைச்சகம் கட்டமைக்கப்பட்டுள்ளது,” என்று கார்னி ஒரு செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
அமெரிக்காவுடன் ஒரு புதிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவை வரையறுக்கவும், வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும், சமூகங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் கனடியர்கள் இந்த புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தனர் என்று அவர் கார்னி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொதுபாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட கரி ஆனந்தசங்கரி முன்னதாக பல அமைச்சரவை அமைச்சுபதவிகளை வகுத்துள்ளார்.
இலங்கைத் தமிழரான இவர் 2015 ஒக்டோபர் 19 இல் நடைபெற்ற கனேடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக நாடாளுமன்றம் சென்றார்.
முதல் நீதி அமைச்சர்
முன்னதாக சுதேச உறவுகளுக்கான அமைச்சராகவும் 2025 மார்ச் 14 முதல் நீதி அமைச்சராகவும், கனடிய சட்டமா அதிபராகவும் பணியாற்றி வருகிறார்
கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள்சேவை நிலையமொன்றை அவர் ஆரம்பித்துள்ளார்.
கனடாவில் வாழ்கின்ற தமிழ் இளைஞர்களிடம் காணப்படும் முரண்பாடுகளைதீர்ப்பதற்காக முன்னின்று செயற்படுபவராக கரி ஆனந்தசங்கரி அந்தகாலங்களில் திகழ்ந்துள்ளார்.
மேலும், கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.